முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
கோவை: முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே சி பழனிச்சாமி கோவையிலுள்ள லாலிரோட்டில் வசித்து வருகிறார். கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை நடத்தி வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற கே சி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரினார். அவ்வாறு அமைக்கவில்லை என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என கூறினார்.

நீக்கம்
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து கேசி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினர். இவர் அதிமுகவிலிருந்து நீக்கிய பிறகும் போலி இணையதளம் ஒன்றை துவக்கி அதில் அதிமுக குறித்து பதிவிட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை
இவரது இணையதளத்திலும் லெட்டர் பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று முட்டுகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் இன்று காலை 4 மணி அளவில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கே சி பழனிச்சாமியை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.

11 பிரிவுகள்
சுமார் ஒரு மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு கே சி பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏமாற்றுதல் நம்பியோர் மீது ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய்யான இணையதளம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல், தவறான சொத்து குறியீட்டைப் பயன்படுத்த சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியது, தண்டனை சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவு உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீண்டும் அதிமுகவில்
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட பிறகும் தற்போது சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கைது செய்த போது போலீஸாருடன் கேசி பழனிச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுகவில் மீண்டும் இணைந்து கொண்டதாக கேசி பழனிச்சாமி கூறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications