Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூலூர் விமானப்படை தளத்தில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்! யார் அவர்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், சூலூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான விமானப் படை தளத்தில் மர்ம நபர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத்தளம் அதிநவீன பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட இந்த விமானப் படை தளத்தின் காம்பவுண்ட் சுவரை ஏறிக்குதித்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார்.

coimbatore air force

இரண்டடுக்கு பாதுகாப்புடன் திகழும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தளத்தில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் இந்த அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த விமானப்படை அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், பிடிபட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர் எதற்காக விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+