ஒரே நாளில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. டென்ஷனில் இலங்கை… 7 பேர் கைது, விசாரணை தீவிரம்
Recommended Video
கொழும்பு:இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. கிட்டத்தட்ட 160 பேர் வரை இந்த தாக்குதல்களில் பலியாகினர். அதனை தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் தெஹிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. அதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இலங்கையில் ஒரு பெரிய அச்சம் நிலவுகிறது. நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 3 மணி அளவில் கொழும்பு தெமட்டோகொடா பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது.

ஊரடங்கு அமல்
தொடர்ச்சியான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசும் உடனடியாக கூடி...நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியது.
|
7 பேர் கைது என அறிவிப்பு
இந்த ஆலோசனைக்கு பிறகு எம்பி ஹர்ஷா டி சில்வா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜி வர்த்தனா கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.

விஜிவர்த்தனா தகவல்
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: செய்தியாளர்களுக்கு அமைச்சர் விஜி வர்த்தனா பேட்டியளித்தார். அப்போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலை தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 12 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications