இலங்கையில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- தீவிர சிகிச்சைகள்
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
உலகையே பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை இயக்குநர் அணில் ஜாசிங்க கூறினார்.

இந்நிலையில் கொரோனா தாக்குதல் அச்சத்தால் நாடாளுமன்றத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுடைய பாதுகாப்புக்கு அதிக கரிசனை வழங்கப்பட வேண்டும்; அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாது. ஆகையால் ஏப்ரல் 25-ல் நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றங்கள் அனைத்தையும் மூடுவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அனைத்து மதத்தினரும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜ்பக்சே வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications