வெளியே வந்த பூனைக்குட்டி.. "இஸ்லாமிய பயங்கரவாத்தை" ஒழிக்க அதிபர் தேர்தல் போட்டியாம்: கோத்தபாய
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் 100% போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாலர் கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தாலும் அரசியல் தலைவர்களுக்கான தொடர்புகள் குறித்த சந்தேகம் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக ராஜபக்சே குடும்பத்தினருக்கு அல்லது அவர்களுக்கு ஆதரவான வெளிநாடுகளுக்கு இக் குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இதற்கேற்ப, ராஜபக்சே அரசாங்கத்தை இந்தியா மீண்டும் இலங்கையில் உருவாக்க வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் தேர்தல் குறித்து மவுனத்தைக் கலைத்துள்ளார் கோத்தபாய ராஜபக்சே.
இது தொடர்பாக கோத்தபாய கூறுகையில், அமெரிக்காவில் என் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்ட வழக்கு.
எத்தனை தடைகள் வந்தாலும் அதிபர் தேர்தலில் தாம் நிச்சயம் போட்டியிடுவேன். அது 100% உறுதி. இஸ்லாமிய பயங்கரவாதத்தை இலங்கையில் ஊடுருவ விட்டதற்கு அரசுதான் பொறுப்பேற்பு.
நான் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த போது அரபி மொழி தெரிந்த அதிகாரிகளும் புலனாய்வுத்துறையில் இருந்தனர். புலனாய்வுத்துறை நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தது. அப்புலனாய்வு அமைப்பை கலைத்ததுதான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவ காரணமாக அமைந்தது என கூறியுள்ளார் கோத்தபாய.
பூனைக்குட்டி வெளியே வந்தது!
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications