இலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.. முழு ராணுவமும் களமிறங்கியது!
கொழும்பு: இலங்கையில் விரைவில் அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இலங்கையில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. மக்கள் இன்னும் அந்த பெரிய தாக்குதலின் வடுக்களில் இருந்து வெளியே வரவில்லை.
கடந்த ஞாயிறுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

என்ன சொன்னார்கள்
இந்த தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனேவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பாக முதல்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் தாக்குதல் நடப்பதற்கும் முதல்நாள் இலங்கை அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மீண்டும் நடக்கும்
இந்த நிலையில் இலங்கையில் விரைவில் அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த முறை தாக்குதல் தேவாலயங்களில் நடக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் பொது இடங்களில்தான் தாக்குதல் நடக்கும் என்று அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவல்
இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமான சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

ராணுவம் குவிப்பு
உள்ளூர் அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து இவர்கள் இலங்கையில் தாக்குதல் நடத்தலாம், என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து பகுதியில் இருந்தும் ராணுவம் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications