நான்தான் பிரதமர்.. மறுத்தால் இடைக்கால அரசாங்கமே கிடையாது.. மிரட்டும் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் கொந்தளிப்பான நிலைமை நீடித்து வரும் நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் தாமே பிரதமர் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்திருப்பதால் அந்நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.
இலங்கையில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனையடுத்து பொருளாதார நிலைமையை சரி செய்யாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலில் சிங்களர் வசிக்கும் தென்னிலங்கையில் ராஜபக்சேக்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் தமிழர்களின் தாயக பிரதேசமாக வடக்கு கிழக்கிலும் தொடருகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கும் அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். மேலும் போராட்டகாரர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதனால் இலங்கையில் கொந்தளிப்பான நிலை தொடருகிறது.
இதனிடையே இலங்கையில் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து 40 எம்.பி.க்கள் விலகி உள்ளனர். அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, எனது தலைமையில்தான் இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்படாவிட்டால் தாம் பிரதமர் பதவியை விட்டு விலக முடியாது. என்னை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என யாருமே வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்துகிறவர்கள் வரலாறு தெரியாதவர்கள். போராடுகிற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார்.
-
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications