இலங்கை: ஜூலை 9-ல் புயல்தான்- நாளை சுனாமியே தாக்கும்- ராஜபக்சேக்களுக்கு பவுத்த பிக்குகள் வார்னிங்
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவியில் நீடித்தால் நாளை சுனாமியே தாக்கும் அளவுக்கு போராட்டம் வெடிக்கும் என்று பவுத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளைத் தொடர்ந்து முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனாலும் மக்கள் கிளர்ச்சி ஓயவில்லை.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இருந்தபோதும் இதுபற்றி உறுதியான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இன்னொரு பக்கம், கோத்தபாய ராஜபக்சேவின் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததால் பதற்றமும் நிலவுகிறது.
இந்நிலையில் போராட்டக்காரர்களை பவுத்த பிக்குகள், அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிப்பது நிச்சயம் என்றனர்.
மேலும் இப்போதும் ராஜபக்சே சகோதரர்களில் சிலர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற துணிகின்றனர்; அப்படி நடப்பதை பொதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள். கடந்த 9-ந் தேதி இலங்கை அரசியலில் புயல்தான் தாக்கியது. ராஜபக்சேக்களின் போக்குகள் தொடர்ந்தால் நாளை சுனாமிதான் இலங்கை அரசியலைத் தாக்கும்; அந்த அளவுக்கு போராட்டம் உக்கிரமானதாக இருக்கும் என எச்சரித்தனர்.
ஏற்கனவே மக்களின் போராட்டங்களை எதிர்கொள்ளாமல் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர். இலங்கையில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே, இன்று அதிகாலை விமானம் மூலம் வெளிநாடு தப்ப முயன்றார். ஆனால் விமான நிலையத்தில் அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பினால் பசில் ராஜபக்சேவால் தப்பி ஓட முடியவில்லை. இதனால் மீண்டும் வீட்டுக்கே திரும்பினார் பசில் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications