பிரபாகரன் கொலை.. எனக்கு அப்போது எதுவுமே தெரியாது! அந்தர் பல்டியடித்த இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா
கொழும்பு: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணமடைண்ட்க செய்தி தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேனா தெரிவித்து இருக்கிறார்.
இலங்கை யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இலங்கை போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் நான் தற்காலிகமாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தேன். பிரபாகரனுக்கு அப்போது மரபணு சோதனை நடைபெற்றது குறித்து எனக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பிரபாகரன் மரணமடைந்தது தொடர்பாகவும் எந்த தகவலுக்கு எனக்கு தெரிவிக்கப்படவில்லை." என்று அவர் கூறினார். இலங்கையின் அதிபராக மைதிரிபால சிறிசேனா பதவியில் இருந்தபோது, "நானே போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உல்ளது." என பேசி இருந்த நிலையில் தற்போது அதற்காக மாற்றமான கருத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார்.
இலங்கையில் பெருமளவில் வசித்து வரும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தனி ஈழம் கேட்டு போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு ஈழத் தமிழ் அமைப்புகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்தன. அதில் முக்கிய பங்கு வகித்தது பிரபாகரனின் விடுதலை புலிகள் அமைப்பாகும். கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே தொடங்கிய போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டது. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகம் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இலங்கை ராணுவம் ஏராளமான போர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் வசித்து வந்த பகுதிகளை நோக்கி குண்டுகளை தூக்கி எரிந்து அப்பாவி தமிழர்களை படுகொலை செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டப்பட்டன. இந்த இறுதிப்போரில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், மூத்த தலைவர்கள் என பலர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அப்போது மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்து வந்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications