Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரன் கொலை.. எனக்கு அப்போது எதுவுமே தெரியாது! அந்தர் பல்டியடித்த இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணமடைண்ட்க செய்தி தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேனா தெரிவித்து இருக்கிறார்.

இலங்கை யாழ்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இலங்கை போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் நான் தற்காலிகமாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தேன். பிரபாகரனுக்கு அப்போது மரபணு சோதனை நடைபெற்றது குறித்து எனக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Srilanka former president Maithiripala Sirisena said he didnt know about Prabhakaran death

பிரபாகரன் மரணமடைந்தது தொடர்பாகவும் எந்த தகவலுக்கு எனக்கு தெரிவிக்கப்படவில்லை." என்று அவர் கூறினார். இலங்கையின் அதிபராக மைதிரிபால சிறிசேனா பதவியில் இருந்தபோது, "நானே போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உல்ளது." என பேசி இருந்த நிலையில் தற்போது அதற்காக மாற்றமான கருத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார்.

இலங்கையில் பெருமளவில் வசித்து வரும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தனி ஈழம் கேட்டு போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு ஈழத் தமிழ் அமைப்புகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்தன. அதில் முக்கிய பங்கு வகித்தது பிரபாகரனின் விடுதலை புலிகள் அமைப்பாகும். கடந்த 1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே தொடங்கிய போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டது. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகம் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.

இலங்கை ராணுவம் ஏராளமான போர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் வசித்து வந்த பகுதிகளை நோக்கி குண்டுகளை தூக்கி எரிந்து அப்பாவி தமிழர்களை படுகொலை செய்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டப்பட்டன. இந்த இறுதிப்போரில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், மூத்த தலைவர்கள் என பலர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அப்போது மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்து வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+