இலங்கை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- சில இடங்களில் தாமதம்- முதலில் தபால் வாக்குகள்!
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. பெரும்பாலான மாவட்டங்களில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வரிசைகளில் நின்றிருந்தாலும் யாரும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
உடனடியாக வாக்குச் சீட்டு பெட்டிகள் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சில இடங்களில் சற்று தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தபால் வாக்கு முடிவுகள் இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கும் அறிவிக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு 18-ந் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து முடிவுகளையும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் திங்களன்று காலைக்குள் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு தேசப்பிரிய கூறினார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications