பிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா? ராஜபக்சே மீது ரணில் தாக்கு
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா? என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய போட்டியிடுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

ஜேவிபி சார்பில் அனுரகுமார திசநாயக்க களத்தில் இருக்கிறார். தமிழர் தரப்பில் எந்த ஒரு நிலைப்பாடும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே அரசு ஒரு கொலைகார அரசு சாடியிருந்தார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சே, 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைவதை பிரபாகரன் விரும்பவில்லை. அதனால் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனையே தமிழர்களும் கடைபிடித்தனர். பிரபாகரன் வேண்டுகோளை இப்போதும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார். பிரபாகரனை முன்வைத்து மகிந்த ராஜபக்சே பிரசாரம் செய்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, 2009-ம் ஆண்டு மிகப் பெரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுதான் யுத்தத்தையே ராஜபக்சே முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த காயத்தை தமிழ் மக்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடுவார்கள் என கணக்குப் போடுகிறார் மகிந்த ராஜபக்சே. எந்த பிரபாகரனை வீழ்த்தியதாக மகிந்த ராஜபக்சே, அதே பிரபாகரனை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கமாக இல்லையா? என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications