பிரதமர் பதவி.. ரணில் நிம்மதி! சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்!
Recommended Video
கொழும்பு: தமது பிரதமர் பதவிக்கு எதிராக எந்த கலகக் குரலும் கிளம்பாது என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அக்கட்சியின் செயற்குழுவில் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிந்து ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றுத் தந்தார் ரணில்.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
ஜேவிபியின் வேட்பாளராக அனுரகுமாரச திசாநாயக்க களத்தில் உள்ளார். பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது.

சஜித் கலகக் குரல்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தாமே அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்பினார். ஆனால் மறைந்த முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச தாமே வேட்பாளர் என பிடிவாதம் காட்டினார்.

சஜித்துக்கு ஆதரவு
அத்துடன் தமது ஆதரவாளர்களையும் கட்சியில் ஒருங்கிணைத்தார். இதனால் சஜித்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நெருக்கடி ரணிலுக்கு ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித்துக்கு ஆதரவும் அதிகமாக இருந்தது.

ஐதேக செயற்குழு
இதனால் அவரையே வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என அக்கட்சியும் முடிவு செய்தது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியில் நீடிப்பார் என்கிற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சஜித்துக்கு ஐதேக ஒப்புதல்
தமது பதவிக்கு ஆபத்து இல்லை என்பதற்கான உறுதிமொழியை கட்சியிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின்னர், சஜித பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் ரணில். அக்கட்சியின் செயற்குழுவும் சஜித பிரேமதாசவை அதிபர் தேர்தல் வேட்பாளராக ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications