29 வயது பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை.. 15 வயது சிறுவன் அதிரடி கைது.. திட்டக்குடியில்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: 29 வயது பெண்ணை 15 வயது சிறுவன்... வழிமறித்து மடக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் நகர்... இங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 29 வயதாகிறது.. திருமணமானவர்... இவரது வீட்டில் கழிப்பறை இல்லை என கூறப்படுகிறது. அதனால் திறந்தவெளி பகுதிக்குதான் வரவேண்டும் என்றும் தெரிகிறது.

15 year old boy torture to 29 year old woman near cuddalore

அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க அந்த பெண் சென்றுள்ளார்... அவர் செல்வதை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் கவனித்தார்.. அந்த பெண்ணின் பின்னாடியே சென்ற சிறுவன், திடீரென பெண்ணை வழிமறித்துள்ளார். பிறகு பாலியல் துன்புறுத்தல் செய்யவும் முயன்றுள்ளான்.

இதை சிறிதும் எதிர்பாராத அந்த பெண் அலறி கூச்சலிட்டவாறே சிறுவனிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிவந்தார்.. நடந்த விஷயத்தை கணவரிடம் சொல்லி அழுதார். இதை கேட்டு அதிர்ந்த கணவர், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் சொல்லி சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டான்.. இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்தனர்.

29 வயது திருமணமான பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி பெண்களை அதிர்ச்சியில் மட்டுமல்ல.. அச்சத்திலும் சேர்த்து ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+