கடலூரில் கொடூரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் எரித்து கொலை?
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இவர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுதன்குமார் (40). இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை இவரது வீட்டிற்குள் சுதன்குமார், அவரது தாய் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இவர்கள் மூவரும் ஆளுக்கொரு அறையில் தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் கடந்த 13 ஆம் தேதியே கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.













Click it and Unblock the Notifications