2 குழந்தைகளின் கையில் சூடு போட்டு சித்திரவதை.. பெண் கைது
திட்டக்குடி அருகே 2 பெண் குழந்தைகளை சித்ரவதை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
திட்டக்குடி: 2 பெண் குழந்தைகளின் கையில் பழுக்க சூடு வைத்து சித்ரவதை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
திட்டக்குடியையை சேர்ந்தவர் சித்ரா. இவர் ஒரு இளம் விதவை. 9 வயது மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்புக்கு சித்ரா ஆளானார்.
தெரிந்ததோ கூலி வேலை மட்டும்தான். கட்டுமான தொழிலாளியாக சென்னையில் வேலை பார்க்கிறார். அதனால் தனது உறவினர் சசிகலா என்பவரின் பாதுகாப்பில் இரு குழந்தைகளையும் விட்டுள்ளார்.

சசிகலா
இந்நிலையில், வீட்டில் அடிக்கடி இரு பெண் குழந்தைகளின் அலறல் சத்தம், அழுகை சத்தம் கேட்பதாக அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகளை சசிகலா கொடுமைப்படுத்துவதாக சந்தேகம் இருப்பதாக கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தந்தனர்.

ஆண் நண்பர்
இதையடுத்து நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் அக்கம் பக்கத்தினர் சொன்ன தகவல்கள் உண்மைதான் என தெரியவந்தது. சசிகலா அந்த பெண் குழந்தைகளிடம் தன் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி உள்ளார். இதைதவிர சசிகலாவுக்கு ஜோதி ராமலிங்கம் என்ற ஆண் நண்பர் இருக்கிறாராம்.

சித்ரவதை
அவருடன் சேர்ந்து கொண்டு, மற்ற வீடுகளுக்கும் வேலை பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார். தங்களால் அங்கு வேலை செய்ய முடியவில்லை என்று குழந்தைகள் மறுக்கவும், அவர்களை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார்.

கையில் சூடு
அதில் ஒரு சிறுமியின் கையில் சூடு போட்டுள்ளார். இதனால் அவளது உள்ளங்கை பழுத்து வீங்கி உள்ளது. இதையடுத்து 2 சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு, சிறுமிகள் சமூக நல பாதுகாப்பு விடுதியில் சேர்க்கப்பட்டனர். உடனடியாக சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் நண்பர் ஜோதி ராமலிங்கத்தையும் தேடி வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications