Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டவர்கள் வீடு, விடுதிகளில் தங்கியுள்ளார்களா? எஸ்பி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர் விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு இங்கு தங்கக் கூடியவர்கள் பற்றிய விவரங்களை உடனே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் உடனடியாக நேரில் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

Are foreigners staying in houses and lodge in Cuddalore district Important notification by SP

அதன்படி கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை பற்றிய விவரங்களை https://indianfrro.gov.in/frro/sform என்ற இணையதள முகவரியில் உள்ள எஸ்-விண்ணப்பம் என்ற படிவத்தை பூர்த்தி செய்து தெரியப்படுத்த வேண்டும்.

அதுபோல் உறவினர்களின் வீடு மற்றும் ஓட்டல், விடுதி, கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோர், அயல் நாட்டினரின் வருகை பதிவினை https://indianfrro.gov.in/frro/FormC என்ற இணைய தள முகவரியில் உள்ள சி-விண்ணப்பம் என்ற படிவத்தில் வெளிநாட்டவர் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்து 24 மணி நேரத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

இதை மீறுபவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946, பிரிவு 14 (C) -படி அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது சம்பந்தமான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அயல்நாட்டினர் பிரிவை அணுகி அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+