கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டவர்கள் வீடு, விடுதிகளில் தங்கியுள்ளார்களா? எஸ்பி முக்கிய அறிவிப்பு
கடலூர்: இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர் விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள், அதாவது வீடு, விடுதி, ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர், வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு இங்கு தங்கக் கூடியவர்கள் பற்றிய விவரங்களை உடனே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் உடனடியாக நேரில் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை பற்றிய விவரங்களை https://indianfrro.gov.in/frro/sform என்ற இணையதள முகவரியில் உள்ள எஸ்-விண்ணப்பம் என்ற படிவத்தை பூர்த்தி செய்து தெரியப்படுத்த வேண்டும்.
அதுபோல் உறவினர்களின் வீடு மற்றும் ஓட்டல், விடுதி, கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோர், அயல் நாட்டினரின் வருகை பதிவினை https://indianfrro.gov.in/frro/FormC என்ற இணைய தள முகவரியில் உள்ள சி-விண்ணப்பம் என்ற படிவத்தில் வெளிநாட்டவர் பற்றிய விவரத்தை பூர்த்தி செய்து 24 மணி நேரத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946, பிரிவு 14 (C) -படி அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது சம்பந்தமான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அயல்நாட்டினர் பிரிவை அணுகி அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications