Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயவு செய்து வீட்டிலேயே இருங்க.. நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலையில் நடுவே 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது.

Recommended Video

    தயவு செய்து வீட்டிலேயே இருங்க.. நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்!

    கடலூா் மாவட்டத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய சுமாா் 3,600 போ் மற்றும் அவா்களது குடும்பத்தினா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனனா். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் வரும் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Awareness painting is being done about the corona in Cuddalore

    இருப்பினும் ஒருசிலர் அத்தியாவசிய தேவைகளின்றி வீதிகளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவ்வாறு சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து, வழக்கு பதிவு செய்தாலும், வீதிகளில் தேவையின்றி சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 1,864 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 604 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    Awareness painting is being done about the corona in Cuddalore

    இந்நிலையில் கடலுார் சிறகுகள் குழுவின் சார்பில், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பகல் இரவு பாராமல் பணிபுரிந்து வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, துாய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்து கொரோனா வைரஸை விரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுமார் 3,400 சதுர அடியில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

    Awareness painting is being done about the corona in Cuddalore

    கடலுார், பாரதி சாலை, டவுன் ஹால் முன்பு வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Awareness painting is being done about the corona in Cuddalore

    Awareness painting is being done about the corona in Cuddalore
    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+