தயவு செய்து வீட்டிலேயே இருங்க.. நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலையில் நடுவே 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது.
Recommended Video
கடலூா் மாவட்டத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய சுமாா் 3,600 போ் மற்றும் அவா்களது குடும்பத்தினா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனனா். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் வரும் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஒருசிலர் அத்தியாவசிய தேவைகளின்றி வீதிகளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவ்வாறு சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து, வழக்கு பதிவு செய்தாலும், வீதிகளில் தேவையின்றி சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 1,864 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 604 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடலுார் சிறகுகள் குழுவின் சார்பில், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பகல் இரவு பாராமல் பணிபுரிந்து வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, துாய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்து கொரோனா வைரஸை விரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுமார் 3,400 சதுர அடியில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

கடலுார், பாரதி சாலை, டவுன் ஹால் முன்பு வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.


-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications