பிரியாணி கடை உரிமையாளரை வெட்டிக் கொன்ற கும்பல்.. ஓசி பிரியாணி தகராறு காரணமா? ஷாக்கில் நெய்வேலி!
கடலூர்: நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசி பிரியாணி தராததால் ஏற்பட்ட முன் விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 56. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். கண்ணன் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்தார். நெய்வேலி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இந்த பிரியாணி கடைக்கு பல கிளைகள் உள்ளன.

நெய்வேலியில் உள்ள கடையில் நேற்று மாலை வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நெய்வேலியில் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணன் மீது திடீரென கற்களை வீசி தாக்கினர்.
இதில் தடுமாறிய கண்ணன் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனே தன்னை தாக்க வருகிறார்கள் என அறிந்து அவர் எழுந்து ஓட முற்பட்டார். அதற்குள் அந்த கும்பல் சுற்றி வளைத்து கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளன. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆனால் அந்த கும்பல் கண்ணனின் முகம் தெரியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் கத்தியால் வெட்டி முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் கண்ணனின் பிரியாணி கடைக்கு வந்த சிலர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாள் கண்ணனின் கடைக்கு வந்து அவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த முன் விரோதம் காரணமாக கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications