கடலூரில் பால் குடிக்க வந்த திருட்டு பூனை.. தலையில் சிக்கிய சொம்பு.. 2 மணி நேர டென்ஷன்.. இப்ப நிம்மதி
கடலூர்: கடலூரில் பக்கத்து வீட்டில் பாலை திருடி குடிக்க வந்த பூனையின் தலையில் சொம்பு சிக்கியதையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டில் இருந்த பாலை திருடி குடிக்க பூனை ஒன்று வந்தது . சொம்பு நிறைய பால் இருந்ததை கண்ட பூனைக்கு ஹைய்யா ஜாலி என்று இருந்தது. நாக்கை குழைத்துக் கொண்டு அந்த பூனை பாலை குடிக்க முயன்றது. அப்போது தலையில் பால் சொம்பு சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து மயங்கிய நிலையில் நகர முடியாமல் இருந்த பூனையை பார்த்து வீட்டின் உரிமையாளர் விலங்கு நல ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளித்தார். தகவலில் பேரில் அங்கு விரைந்து சென்ற செல்லா, பூனையின் தலையில் சிக்கிய சொம்பை எடுக்க முயன்றும் முடியாததால் பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று மயக்க மருந்து அளித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூனையின் தலையில் சிக்கிய சொம்பு அகற்றப்பட்டது.
தலையில் இருந்த சொம்பு அகற்றியதுதான் மிச்சம். பாலை கொஞ்சமாக குடித்த மகிழ்ச்சியில் பூனை சிட்டாட்டம் "பறந்து " சென்றுவிட்டது. அண்மைக்காலங்களாக குழந்தைகள் தலையில் குடம் சிக்குவது, குரங்கு தலையில் சொம்பு மாட்டுவது என இருக்கிறது. குழந்தைகளின் தலையில் சொம்பு, பாத்திரம் என எது மாட்டினாலும் தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாத்திரத்தை வெல்டிங் மெஷினால் கட் செய்து மீட்கிறார்கள். அது போல்தான் பூனையின் தலையில் சிக்கிய சொம்பும் நீக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications