கடலூரில் பால் குடிக்க வந்த திருட்டு பூனை.. தலையில் சிக்கிய சொம்பு.. 2 மணி நேர டென்ஷன்.. இப்ப நிம்மதி
கடலூர்: கடலூரில் பக்கத்து வீட்டில் பாலை திருடி குடிக்க வந்த பூனையின் தலையில் சொம்பு சிக்கியதையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகர் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டில் இருந்த பாலை திருடி குடிக்க பூனை ஒன்று வந்தது . சொம்பு நிறைய பால் இருந்ததை கண்ட பூனைக்கு ஹைய்யா ஜாலி என்று இருந்தது. நாக்கை குழைத்துக் கொண்டு அந்த பூனை பாலை குடிக்க முயன்றது. அப்போது தலையில் பால் சொம்பு சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து மயங்கிய நிலையில் நகர முடியாமல் இருந்த பூனையை பார்த்து வீட்டின் உரிமையாளர் விலங்கு நல ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளித்தார். தகவலில் பேரில் அங்கு விரைந்து சென்ற செல்லா, பூனையின் தலையில் சிக்கிய சொம்பை எடுக்க முயன்றும் முடியாததால் பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று மயக்க மருந்து அளித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூனையின் தலையில் சிக்கிய சொம்பு அகற்றப்பட்டது.
தலையில் இருந்த சொம்பு அகற்றியதுதான் மிச்சம். பாலை கொஞ்சமாக குடித்த மகிழ்ச்சியில் பூனை சிட்டாட்டம் "பறந்து " சென்றுவிட்டது. அண்மைக்காலங்களாக குழந்தைகள் தலையில் குடம் சிக்குவது, குரங்கு தலையில் சொம்பு மாட்டுவது என இருக்கிறது. குழந்தைகளின் தலையில் சொம்பு, பாத்திரம் என எது மாட்டினாலும் தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாத்திரத்தை வெல்டிங் மெஷினால் கட் செய்து மீட்கிறார்கள். அது போல்தான் பூனையின் தலையில் சிக்கிய சொம்பும் நீக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications