கடலூர் பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கிய பெண்கள்.. அதென்ன கையில்? பாலினம் கண்டறியும் கருவி".. விழித்த வேப்பூர்
கடலூர்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கெனவே பிரத்யேகமாக புரோக்கர்களும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது கடலூரில் என்ன நடந்தது தெரியுமா? வேப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள் யார்?
தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் செய்து, பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு சில மாதங்களுக்கு முன்பு, ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவர் வீட்டில், அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இறுதியில் மேரி உட்பட பலரும் கைதாகியிருந்தனர்.
ஸ்கேன் சென்டருக்கு சீல்
கடந்த மாதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் செய்து குழந்தை ஆணா, பெண்ணா என்பதை திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சில கிளினிக்குகளில் கூறுவதாகவும், அதற்காக பணம் பெறுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவும், மேற்கண்ட பகுதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது-
இறுதியில், வீராணம் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த "பசுபதி ஸ்கேன் மையம்" என்ற கிளினிக்கில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேப்பூர் பஸ் ஸ்டாண்டு
இந்நிலையில், கடலூர் மாவட்டத்திலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. வேப்பூர் பகுதியில் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து சென்றது.
இந்த புகாரின்பேரில், சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வேப்பூரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. அப்போது 3 பேர், பாலினம் கண்டறியும் கருவியுடன் உட்கார்ந்திருந்தனர்... இதையடுத்து, வேப்பூர் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர்.
டோர் டூ டோர் செக்கிங்
போலீசார் நடத்திய விசாரணையில், ஆவட்டி அடுத்த மா.புடையூரை சேர்ந்த தென்னரசு, 32, திட்டக்குடி பெரியார் நகர் தீனதயாளன் மனைவி அஜிரபீ, 32; சேலம் மாவட்டம், குமாரபாளையம் ஜெயவேல் மனைவி எல்லம்மாள், 32என்பதும் தெரியவந்தது..
பாலினம் கண்டறிய வேண்டியவர்கள், இவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டிற்கே சென்று இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்வார்களாம்.. அதாவது கையில் மிஷினுடனேயே கர்ப்பிணி வீடுகளுக்கு செல்வார்களாம்.. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, தென்னரசு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications