Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஞாயிறு மதியம் சமையல் உனது, விரும்பி நீ சமைத்துடுவாய்'.. உள்ளே வந்த நாகராணி.. அலறிய இளைஞர்

கடலூரில் சிலிண்டருக்கு அடியில் சீறிய நல்ல பாம்பு லாவகமாக பிடித்து காட்டில் விடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிலிண்டருக்கு அடியில் நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டரை தூக்கி வைக்கும் போது அடியில் இது போல் ஏதேனும் பாம்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்று அதிர்ச்சியுடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டருக்கு அடியில் பாம்பு இருந்த சம்பவம் கடலூரில் உள்ள வெளிச்செம்மண்டலத்தில் நடந்திருக்கிறது. மதியழகம் என்பவர் வீட்டில் தான் சிலிண்டருக்கு அடியில் பாம்பு சுரண்டு படுத்து கிடந்த சம்பவம் நடந்திருக்கிறது. சரி என்ன நடந்தது எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்

கடலூர் வெளிச்சமண்டலத்தைச் சேர்ந்த மதியழகம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது சமையறையில் உள்ள சிலிண்டர் இருக்கும் பகுதியில் ஏதோ உஸ் உஸ் என சத்தம் வருவதை கவனித்தார். அவருக்கு ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது என்பது தெரிகிறது.

நல்ல பாம்பு

நல்ல பாம்பு

நேராக சிலிண்டரை ஆட்டி என்ன சத்தம் வருகிறது என்பதை பார்த்திருக்கிறார். அப்போது சிலிண்டருக்கு அடியில் உள்ள சிறிய துவாரம் வழியாக நல்ல பாம்பு எட்டி பார்த்து படமெடுத்து ஆடியிருக்கிறது. இதை கண்டு நடுங்கிப்போன மதியழகன் உடனடியாக கடலூரில் உள்ள பாம்பு ஆர்வலர் செல்வாவிற்கு தகவல் கொடுத்தார்.

அலறிய உறவினர்கள்

அலறிய உறவினர்கள்

அங்கு செல்வா சென்று பார்த்த போது பாம்பு இருக்கிற இடமே தெரியாத அளவிற்கு சிலிண்டருக்கு அடியில் சுருண்டு படுத்திருந்தது. சிலிண்டரை வெளியிடுத்து கவுத்து பார்த்தார் . பின்னர் சிலிண்டரின் கீழ் பகுதியில் மெதுவாக வெளியே எட்டி பார்த்தது நல்ல பாம்பு. அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அலறிஅடித்த படி தள்ளி போனார்கள்.

கிண்டல் பதிவு

கிண்டல் பதிவு


இதையடுத்து நல்ல பாம்பை லாவகமாக பிடித்த செல்லா அதனை ஆசுவாசப்படுத்தி பாட்டிலில் அடைத்தார். அதன்பின்னர் காப்பு காட்டில் சென்று பாம்பை விட்டுவிட்டார். சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த சிலர், வீட்டில் கமகமன்னு வாசனை வந்திருக்கும். உடனே என்ன சமைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க பாம்பு வந்திருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

அடிக்காதீர்கள்

அடிக்காதீர்கள்

சிலிண்டருக்கு அடியில் என்றில்லை, ஷூவிற்குள்ளும் பாம்பு இருக்கும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். எனவே எந்த ஒரு பொருளையும் எச்சரிக்கையாக கையாள்வது ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். பாம்பு நீண்ட நாட்களாக பயன்படுத்தாத கற்குவியல்கள், ஷூக்கள், சிலிண்டர்கள், ஏன் கழிவறைகளில் கூட பதுங்கி இருக்கும் என்கிறார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். அதே போல் பாம்பு உள்ளிட்ட விலங்குகளை கண்டால் அடித்துக் காலி செய்யாமல் தீயணைப்பு துறைக்கோ அல்லது பாம்பு பிடி ஆர்வலர்களுக்கோ தகவல் தெரிவிப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+