கடலூரில் விழுந்த குட்நியூஸ்.. நெய்வேலி டூ சென்னை.. வேற லெவல் தமிழ்நாடு.. எகிறியடிக்கும் உதான் திட்டம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூருக்கு கூடிய சீக்கிரம் குட்நியூஸ் கிடைக்க போகிறது.. அந்தவகையில், உதான் திட்டத்தின்கீழ் புதிய சேவை துவங்க போகிறார்கள். உதான் திட்டம் என்றால் என்ன?

வேலூரில் விமான சேவை பணிகள் வேலை நடந்து முடிந்து, தற்போது இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டன.. இங்கு விமானம் இயக்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்டால், இன்னும் சில நாட்களிலேயே வேலூர் விமான சேவை ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள்.

Do you know whats Udan Flight Scheme and New Flight Service from Cuddalore Neyveli to Chennai

விமான சேவை: இந்த விமான சேவை துவங்கிவிட்டால், பெங்களூர் - சென்னை சென்று வருவதற்கான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும், வேலூர் மாவட்டத்துக்கே இந்த விமான சேவை, மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. உதான் திட்டத்தில்கீழ், ரூ.65 கோடியில் இந்த சிறிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சிறு நகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் இந்த சேவை துவங்கப்படுகிறது.. உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும். இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தார்.. உதான் சேவை அளிக்கும் விமானங்கள் பொதுவாக 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடியதாக இருக்கும். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் இந்த 2,500 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

தஞ்சாவூர்: இப்படிப்பட்ட சூழலில், இதே உதான் திட்டத்தின்கீழ் தஞ்சாவூரிலும் விமானசேவை துவங்கப்பட உள்ளது.. அதாவது தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு பயணிகள் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ஹரியாணா மாநிலம் குர்கானில் இயங்கி வரும் ஏர் டாக்ஸி நிறுவனம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.

சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் இந்த சேவை துவங்கப்படுகிறது.. உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும். இந்த திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தார்.. உதான் சேவை அளிக்கும் விமானங்கள் பொதுவாக 19 முதல் 78 நபர்கள் அமரக்கூடியதாக இருக்கும். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் இந்த 2,500 ரூபாய் சலுகை அளிக்கப்படும்.

சென்னை விமான சேவை: அந்தவகையில், தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக 20 இருக்கைகளுடன் இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை - சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்ட நிலையில், தஞ்சையில் விமான சேவை ஆரம்பமாகிறது.. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் இப்போதே தயாராக உள்ளதாம். இந்த சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம் என்கிறார்கள்.

இதுபோலவே, உதான் திட்டத்தில் நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறுரக விமான சேவை துவங்கப்படுகிறது.. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்தே, இந்த விமானங்களை இயக்க போகிறார்களாம்..

குஷியில் பயணிகள்: ஆக, தஞ்சை, நெய்வேலி என இந்த 2 இடங்களிலுமே துவங்கப்படும் விமான சேவைானது, பெரும் வளர்ச்சியை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த 2 இடங்களிலுமே, அடுத்த மாதமே விமான சேவை ஆரம்பமாகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+