கடலூர் ஆணவக்கொலை வழக்கு.. 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. காதல் மனைவியை கணவனே கொன்ற கொடூரம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 2014ஆம் ஆண்டு நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாதி ஆணவக்கொலைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுக்க, சாதி ஆணவக் கொலைகளின் அக்கிரமம் அடங்கியபாடில்லை.

சாதி ஆணவக்கொலை வழக்குகளில், குற்றம் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், சாதி ஆணவக்கொலைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆணவக்கொலைகள் பல, நாட்டையே உலுக்கி இருக்கின்றன. ஆணவக்கொலைகளில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக, சாதி ஆதிக்கத் திமிருடன் பெண்ணைப் பெற்றவர்கள் காதலர்களை கொல்லும் நிகழ்வுகள் ஏராளம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நிகழ்ந்தது வேறு வகை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சீதாவை சரவணன் என்பவர் காதல் திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு சரவணனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சீதாவை அவரது வீட்டுக்கு செல்லும்படி கணவர் சரவணனே கட்டாயப்படுத்தினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதாவை, அவரது கணவரான சரவணன், அவரது தாய் வீட்டுக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால், சீதா செல்ல மறுக்கவே, சரவணன் அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் பெண்ணை அடித்துக் கடுமையாக தாக்கி கொலை செய்து உடலையும் எரித்தனர்.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன் கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications