சோதனை மேல் சோதனை... எலி, பாம்பு கறிகளை சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்
Recommended Video

கடலூர்: விருத்தாச்சலத்தில் தனியார் சர்க்கரை ஆலை தர வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்கக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாள் போராட்டமாக, எலி மற்றும் பாம்புகளை வாயில் கவ்வியபடி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரையில், ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலையானது இயங்கி வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை
இந்தநிலையில், கரும்பு விவசாயிகளுக்கு 23 மாதங்களாக தராமல் இருக்கும் நிலுவை தொகையை வட்டியுடன் தர வேண்டும், விவசாயிகளை ஏமாற்றி, கடன் என்ற பெயரில் ஆலை நிர்வாகத்துடன் துணை நின்று 40 கோடியை ஏமாற்றிய பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்
கரும்பு டன் ஒன்று 4000 ரூபாய் வயல்வெளி விலையாக கொடுக்க வேண்டும், கரும்பு நிலுவை தொகை வழங்கும் வரை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அரை நிர்வாண போராட்டம்
ஆனால் ஆலை நிர்வாகமோ, அரசு துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், இரண்டாவது நாளான நேற்று, விவசாயிகள் அரை நிர்வாணத்தில், உடலில் பட்டை நாமத்துடனும், காதில் பூ வைத்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலி, பாம்பு கறி
மேலும், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள், மூன்றாவது நாளான இன்றும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், எலி மற்றும் பாம்புகளை கவ்வியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications