கடலூரே கடலானது.. விழுப்புரத்தில் மூழ்கிய பயிர்.. மழை பாதிப்பில் மாவட்டங்கள்.. முதல்வர் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் மழை பாதிப்பு காரணமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கின்றன.. மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்தது.

கடலூர்: இதில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அதிக கனமழை பெய்தது. இதன்காரணமாக, மேற்கண்ட மாவட்ட மக்கள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.. இந்த மாவட்டத்தின் பெருமளவு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த மழை வெள்ளத்தால், மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் இன்னும் அதிகமாக ஏற்பட்டு, மக்கள் அதிக சிரமத்திற்குள்ளாகி, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது..
திருவண்ணாமலை: இதில், திருவண்ணாமலையில், மொத்தம் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதில், ஒரு நிலச்சரிவில் 7 பேர் பரிதாபமாக மண்ணில் புதைந்து இறந்துவிட்டார்கள்.. அந்த சடலங்களை மீட்கும் பணி இன்றும் தொடர்கிறது.. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என்றும் கேட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் ஆய்வு: இதனிடையே முதல்வர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது.. அதிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications