சுவாமி சகஜானந்தா பிறந்தநாள்.. ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் கருப்புக்கொடி!
கடலூர்: கல்வித்தந்தை சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சிதம்பரத்தில் திமுக, சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திண்ணை பள்ளிகளை ஆரம்பித்து ஏழை மக்களுக்குக் கல்வியை கற்பித்து சமூக மாற்றத்திற்கு போராடியவர் சுவாமி சகஜானந்தா. அப்பகுதி மக்களிடம் யாசகம் பெற்று கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கி கல்வியை வழங்கி வந்தார்.

பின்னர் 1916-ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே ஆதிதிராவிடர் சமூக நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் ஓமக்குளத்தில் தொடக்க பள்ளியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு நந்தனார் பெயரில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமாகத் திகழும் இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், பல லட்சம் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர்.
இந்நிலையில், சுவாமி சகஜானந்தாவின் 135வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்க இன்று சிதம்பரம் வருகை தருகிறார். இதற்கு சிபிஐஎம், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சனாதன கொள்கையை உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைத்து சமூக மக்களோடும் இணக்கமாகவும் அவர்களின் கல்வி உயர்வுக்காகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்களை களவாட முயற்சிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று சிதம்பரத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைகளை வழங்காத சனாதன சக்திகளின் குரலாக ஒலிக்கின்ற ஆளுநர் ஆ.என் ரவி, சிதம்பரத்தில் நடைபெறும் சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருகை தருவதை அனைத்துக் கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநரை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications