உலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு
டெல்லி: சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல முன்கள பணியாளர்கள், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த கவலைகளால் அதனை செலுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.
உலகில் பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க, இந்தியா அதற்கு நேர்மாறான சிக்கலில் உள்ளது. இங்கு போதுமான அளவிலான தடுப்பூசிகள் இருந்தாலும், அதை போட்டுக் கொள்ளத் தான் ஆளில்லை.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டங்களை இந்தியா வகுத்துக் கொண்டிருக்க, சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல முன்கள பணியாளர்கள், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த கவலைகளால் அதனை செலுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.
தடுப்பூசிக்காக உதவி கேட்கும் நாடுகள்
தடுப்பூசி விகிதம் போடும் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்காவிட்டால், ஜூலை மாதத்திற்குள் இந்தியா 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை தவற விட நேரிடும். அதுமட்டுமின்றி, இது வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தான் பிரச்சனையாக உள்ளது, மேலும் சில நாடுகள் உதவிக்காக இந்தியாவை அணுகுகின்றன. கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்காக மாதத்திற்கு 500 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்தியா கூறுகிறது. இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் அவற்றை வாங்க முயற்சித்து வருகின்றன. ஆனால், மருந்தை தயாரிக்கும் இந்தியாவில் அதனை போட்டுக் கொள்வதில் தான் பிரச்சனையாக உள்ளது.

தமிழகத்தின் நிலை?
தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் சுகாதார முன்களப்பணியாளர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 10 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கடந்த திங்கள் வரை 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 4,926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் மொத்தம் 73,953 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரத் துறை அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மருத்துவ பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
75% பேர் மட்டுமே
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், தடுப்பூசிக்காக பதிவு செய்தவர்களில் 75% பேர் மட்டுமே ஜனவரி 21 ஆம் தேதி தடுப்பூசி போட வந்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு பீகாரில் இந்த விகிதம் 51.6% ஆக மிகக் குறைவாக இருந்தது. ஜனவரி 19 ஆம் தேதி, பதிவு செய்தவர்களில் சுமார் 55% பேர் ராஜஸ்தானிலும், 54% தமிழகத்திலும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications