சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன்! தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் உறுதி!
கடலூர்: சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என தேசிய தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் எம்.எஸ்.பிட்டா உறுதியளித்துள்ளார்.
Recommended Video
சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
தமிழகத்தில் தனக்கு இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக நன்றி தெரிவித்தார்.

சாமி தரிசனம்
தேசிய தீவிரவாத எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். பிட்டா சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் தீட்சிதர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.பிட்டா, கோயில் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அளிப்பது தான் அரசின் பணி என்றார்.

முதல் ஆளாக
கோயிலுக்கோ அல்லது கோயில் நிர்வாகத்திற்கோ ஏதாவது பிரச்சினை என்றால் நான் முதலில் வந்து நிற்பேன். எனக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மற்றும் காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களை சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்தேன். எல்லாக் கோயில்களிலும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள் என கூறினார்.

அடிக்கடி சர்ச்சை
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை பொறுத்தவரை அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வயது முதிர்ந்த தீட்சிதர் ஒருவரை பிரசாதம் கேட்ட காரணத்திற்காக கோவில் அலுவலகத்தில் இருந்த தீட்சிதர்கள் தாக்கிய நிகழ்வு அரங்கேறியது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வும் சிதம்பரம் கோவில் வளாகத்தில் நடந்தது.

கம்யூனிஸ்ட்கள் குரல்கள்
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்து வரும் சூழலில், சிதம்பரம் கோவிலுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வருவேன் என தீவிரவாத எதிர்ப்பு இயக்க தலைவர் எம்.எஸ்.பிட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications