என்எல்சி பாய்லர் வெடித்த விபத்து- மருத்துவமனையில் மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி காலையில் திடீரென பாய்லர் வெடித்தது. 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

NLC Boiler blast- death toll climbes to 13

பாய்லர் வெடித்து சிதறியதில் அங்கேயே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் அடுத்தடுத்து நேற்று மாலை வரை உயிரிழந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து நெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+