திமுக எம்எல்ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கடலூரில் பெரும் பரபரப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே நல்லாத்தூரில் திருமண மண்டபத்தில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள பலரும் கலந்து கொண்டிருந்தனர். மாலை ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே நடந்துள்ளது.
கடலூர் எம்எல்ஏ: அப்போது இரவு 8 மணியளவில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் உள்ளே செல்ல முயன்ற போதே, அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தூக்கி எரிந்துள்ளார்.
இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், பெட்ரோல் குண்டு வீச்சால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. திமுக எம்எல்ஏ ஐயப்பனைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக அங்குள்ள திமுகவினர் கூறுகின்றனர்.
போலீஸ் விசாரணை: அங்கே ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலூர் போலீஸ் கண்காணிப்பாளர் ராஜாராமன் விசாரணை நடத்தி வருகிறார்.
அங்குள்ள திமுகவினர் சிலர் எம்எல்ஏவை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதையடுத்து எம்எல்ஏவுக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா.. அவர்கள் யாராவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பல கோணங்களில் விசாரணை: மேலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் ரோந்து பணிகளை ஆரம்பித்துள்ள போலீசார், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த மர்ம நபர் யார் என்பதைக் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எம்எல்ஏ ஐயப்பன் காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்களில் மண்டபத்திற்குள் செல்ல இருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, மர்ம நபர் எம்எல்ஏ ஐயப்பனை பின்தொடர்ந்து வந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அங்கே சுற்றி இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ள போலீசார், அதன் அடிப்படையிலும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டூவீலரில் வந்த நபர் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படும், இது குறித்த உறுதியான தகவல் இல்லை. அதேபோல எதற்காக இப்படித் தாக்குதல் நடத்தினார் என்ற என்ற காரணமும் தெரியவில்லை. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications