சென்னை தேசிய நெடுஞ்சாலை தனியார் லாட்ஜில்.. ஆசையோடு போன கும்பல்.. வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில், கடலூர் அருகே தங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதித்த போதுதான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ராமநத்தம் கிராமம் திருச்சி- சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில், விருத்தாசலத்தில் இருந்து சுமார் 42 கிமீ தூரத்தில் ராமநத்தம் இருக்கிறது. இதுதான் கடலூர் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் உள்ள ஊராகும்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தில் ஒரு கட்டிடத்தில் தனியார் பாருடன் செயல்படும் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் ரகசியமாக விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்
அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது இளம் பெண்ணிடம் 4 ஆண்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்டதுடன், 4 பேரை மடக்கி பிடிக்க முயற்சித்தார்கள். அப்போது 3 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
மீட்கப்பட்ட பெண்ணை விசாரித்த போது பண்ருட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அந்த சிறுமியை திவ்யா(வயது 27) என்ற உறவுக்கார பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த அயன்பேரியூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29), குன்னம் அடுத்த நம்மையூர் கிராமத்தை சேர்ந்த சேகர் (47), பெரம்பலூர் மாவட்டம் செங்குணத்தை சேர்ந்த சக்திவேல் (27) உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் தப்பியோடியவர் பொயணப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயபால்(47) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமநத்தம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய திவ்யா மற்றும் கார்த்திக், சேகர், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய ஜெயபாலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications