வீட்டில் தனியாக இருந்த சாந்தி.. சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரைநிர்வாண கோலம்.. கொடூர கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 45 வயது பெண், அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே குருக்கத்தான் சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி வயது (45). இவர் விருத்தாசலம் அடுத்த ஆலடி ரோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.
சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கோலம் போடுவதற்காக காலையில் தினமும் வீட்டில் வெளியே வரும் அவர் நேற்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை. ஒரு கதவும் லேசாக திறந்து கிடந்தது.

அரைநிர்வாணம்
சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது சாந்தி கழுத்தறுக்கப்பட்டு, வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்

பிரேத பரிசோதனை
இதனை கண்டு அச்சம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விருதாச்சலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் துணை காவல் கண்காணிப்பாளரும் விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்பி நேரில் விசாரணை
மோப்ப நாய் அர்ஜுன் கொண்டும் கைரேகை நிபுணர்கள் தடயங்கள் ஏதேனும் கிடைக்கின்றதா என்பதை பரிசோதித்து சேகரித்தனர். பின்னர் சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ விசாரணை மேற்கொண்டார். கொல்லப்பட்ட சாந்தி கடந்த 7 மாதங்களாகத்தான் அங்கு வசித்து வந்துள்ளார்.

அரை நிர்வாண கோலம்
சாந்தியின் சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications