சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இப்படியா ஆகணும்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விமலா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இன்று உயிருடன் இல்லை.. அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி விமலாவுக்கு 31 வயது ஆகிறது. இவர்களுக்கு பிரித்திகா (11), மகிழினி (1) என்ற 2 பெண் குழந்தைகளும், மகிழன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்ததால், விமலா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

பின்னர் விமலா சிதம்பரம் அருகே வடக்கு தில்லைநாயகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி மீண்டும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரண்டு தையல் விட்டு விட்டதால் ரத்தம் வெளியேறி வருவதாக கூறி கடந்த மார்ச் 16-ந் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமலா சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விமலாவின் உறவினர்கள் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தாசில்தார் ஹரிதாஸ், டிஎஸ்பி பிரதீப், இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விமலாவுக்கு சரியான முறையில் சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்பால்தான் விமலா இறந்துள்ளார். எனவே பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு போலீசார், விமலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் பின்னர் அறிக்கை வந்ததும் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விமலாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்














Click it and Unblock the Notifications