"2 முறை அபார்ஷன்.. அதான் இப்படி".. போலீசாரையே திகைக்க வைத்த நர்மதா.. ஆடிப்போன கடலூர்
குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடலூர்: 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது.. வேற வழியில்லை.. அதான் இப்படி செய்துவிட்டேன் என்று நர்மதா என்ற இளம்பெண் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
பண்ருட்டி விசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவரது மனைவி பாக்கியலட்சுமி... இவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாளைக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.. ஆனால், அந்த குழந்தை மறுநாளே காணாமல் போய்விட்டது.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தரவும், போலீசார் விரைவான விசாரணையை மேற்கொண்டனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தபோதுதான், ஒரு பெண் குழந்தையை எடுத்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது..

குழந்தை
அந்த ஆதாரத்தை வைத்து, அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையுடன் புதுச்சேரி பஸ்ஸில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து, குழந்தையையும் போலீசார் மீட்டுவிட்டனர்.. இவ்வளவும் வெறும் 3 மணி நேரத்தில் நடத்தி காட்டினர் நம் போலீசார்..!

திருட்டு
பின்னர் குழந்தையை திருடிய பெண்ணிடம் விசாரணை நடந்தது.. அப்போது அவர் சொன்னதாவது, "என் பெயர் நர்மதா.. என் கணவர் பெயர் சிலம்பரசன்.. லவ் மேரேஜ் செய்து கொண்டோம்.. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகிறது.. ஆனால், குழந்தைகள் இல்லை.. 2 முறை கர்ப்பமானேன்... அபார்ஷன் ஆகிவிட்டது..

அபார்ஷன்
அதனால் எங்களுக்கு இது பெரிய வருத்தத்தை தந்தது. 2வது முறை கர்ப்பமாகி அபார்ஷன் ஆனதை வீட்டில் சொல்லவில்லை.. கர்ப்பமாக இருப்பது போலவே நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.. என் கணரும் நம்பினார்.. இதை நம்பி 5வது மாசம் எனக்கு வளைகாப்பு செய்தார்கள்.. ஆனால் 5 மாசம் கழித்து, என்ன வயிறு பெரிசா ஆகலையேன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிட்க்.

கைது
அதனால்தான் மாச மாசம் செக்கப் போற மாதிரியே, ஆஸ்பத்திரிகளுக்கு சென்று குழந்தை ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வந்தேன்.. அதுக்குள்ளே மாசம் நெருங்கி கொண்டே வந்தது.. வேற வழியில்லாமல் கடலூர் ஆஸ்பத்திரியில் புகுந்து விட்டேன்.. பாக்கியலட்சுமி அட்மிட ஆகி இருநதார்.. அவரிடம் உருக்கமாக பேசி பழகினேன்.. பிறகுதான் குழந்தையை கடத்தினேன் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications