பேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்... இரண்டு உயிர்கள் பறிபோன சோகம் - உறவினர்கள் கொந்தளிப்பு
பேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பார்த்த மன உளைச்சலில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதைகேள்விப்பட்டு மனமுடைந்த அந்த பெண்ணின் தாய்மாமன் மகனும் தூக்குப் போட்டு உயிரை
Recommended Video
கடலூர்: காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசி கொல்கிறார்கள். கத்தியால் குத்தி கொல்கிறார்கள். கடலூரில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்துள்ளான் ஒரு கயவன். இளம்பெண்ணின் தற்கொலையால் மனமுடைந்த அந்த பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெயர் ராதிகா என்பதாகும். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன் என்பவரின் மகளாவார். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
அவரது அத்தை மகன் விக்னேஷ். இருவருக்கும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
அதே ஊரில் வசிக்கும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவன் ராதிகாவிற்கு காதல் வலை வீசியுள்ளான். ஆனால் ராதிகா அதை கண்டுகொள்ளவில்லை.

ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்
ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அதை பேஸ்புக்கில் வெளியிடவே, அது கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைரலானது. வாட்ஸ்அப் குழுவிலும் பகிரப்பட்டது. இதனால் ராதிகா அதிர்ச்சியடைந்தார்.

மிரட்டிய கும்பல்
அவமானப்பட்ட ராதிகா தன்னை ஆபாசமாக சித்தரித்த பிரேம்குமாரை திட்டியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், கும்பலாக சென்று மிரட்டியிருக்கிறான். சாதியை சொல்லி திட்டியதாக கூறி பிசிஆர் பிரிவில் வழக்குப் போடுவோம், குடும்பத்தோடு உள்ளே போக வேண்டியிருக்கும் என்றும் மிரட்டினர். அசிங்கமாகவும் திட்டியுள்ளனர்.

அவமானத்தில் தற்கொலை
பாதிக்கப்பட்ட ராதிகா, தன்னையும், தனது குடும்பத்தினரையும் அந்த கும்பல் நிம்மதியாக வாழ விடாது என்று நினைத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாப்பிள்ளையும் மரணம்
ராதிகா இறந்த தகவலைக் கேள்விப்பட்ட உடனே அவரது தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ் தனது தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரிழந்தார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மரணம் விக்னேஷை அதிகம் காயப்படுத்தவே அதை தாங்கமுடியாத சோகத்தில் தூக்குப் போட்டுக்கொண்டதாக உறவினர்கள் கூறினர்.

குற்றவாளி மீது நடவடிக்கை
மனதில் வஞ்சக எண்ணம் கொண்ட பிரேம்குமார், ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட புகைப்படம் இருவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அவனை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராதிகா, விக்னேஷ் உறவினர்கள் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிரேம்குமார் மீது நடவடிக்கை பாயுமா?
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications