வீட்ல கால் வச்சதுமே குடும்பத்தை பிரிச்சாங்க.. அதான் கொன்றேன்.. அண்ணி கொலையில் கொழுந்தன் வாக்குமூலம்
கடலூர்: திட்டக்குடி அருகே பெண் கொலை வழக்கில் குடும்பத்தை பிரித்ததால் கொலை செய்தேன் என அந்த பெண்ணின் கொழுந்தன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் வெங்கடேசன், செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சொந்த வேலை
வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சென்னை சென்றார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெங்கடேசனின் சகோதரரான காசிநாதன் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென பிரேமலதாவை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்.

ராமநத்தம் போலீஸ்
இதையடுத்து அவர் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து காசிநாதனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது 2ஆவது அண்ணன் ரவியின் மனைவி ராதிகா. இவர் அடிக்கடி என்னிடம் வந்து நம் குடும்பம் பிரிந்து ஆளாளுக்கு ஒரு பக்கம் வசிக்கிறோம்.

பிரேமலதா
இதற்கு காரணம் பிரேமலதாதான். அவர்தான் குடும்பத்தை பிரித்தார் என ராதிகா என்னிடம் கூறினார். இதனால் எனக்கு பிரேமலதா மீது கோபம் வந்தது. உடனே குடும்பத்தை பிரித்த பிரேமலதாவை குத்தி கொலை செய்ய முடிவு செய்தேன். அதன் படி காத்திருந்த போது அண்ணன் வெங்கடேசன் ஊரில் இல்லை என்பதும் சென்னை சென்றுள்ளதும் தெரியவந்தது.

சந்தர்ப்பம்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது பிரேமலதாதான் என்னை வரவேற்றார். அவரிடம் அண்ணன் இல்லையா என கேட்டேன், அதற்கு அவர் சென்னை சென்றுள்ளார் என்றார். எனவே அண்ணன் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன்.

தண்ணீர்
அப்போது எனக்கு தண்ணீர் கொண்டு வர போனார். உடனே நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டேன். அப்போது ஒன்றும் புரியாமல் சரிந்த அவரிடம் என் குடும்பத்தை பிரித்தால் நான் சும்மா விடுவேனா, சாவு என கூறி நன்றாக குத்தினேன். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தவுடன் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தேன் என்றார். கொலை செய்த காசிநாதனை போலீஸார் கைது செய்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் படி அவரது இன்னொரு அண்ணி ராதிகா அதாவது பிரேமலதா குடும்பத்தை பிரிக்கிறார் என காசிநாதனிடம் போட்டுக் கொடுத்தவரை போலீஸார் விசாரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications