பிரதமர் மோடி பாதுகாப்புக்கு.. தினசரி ரூ.1.34 கோடி.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம் செலவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கும் 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்படும் நிதி தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5.5 லட்சம் செலவிடப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணிக்குத் தனது நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிலையில், அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

budget 2025 union budget 2025 narendra modi 2025 2025

எஸ்பிஜி படைக்கு எவ்வளவு?

மேலும், எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி உள்துறை அமைச்சகத்திற்கு ரூ 2,33,210.68 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் சுமார் 70%, அதாவது ரூ 1,60,391.06 கோடி நாட்டின் பாதுகாப்புப் படைகளான சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் படைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த படைகள் தான் உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது..

அதேபோல பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒரு நாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 9303 ரூபாயும் செலவிடப்படுகிறது.


எஸ்பிஜி படை என்றால் என்ன?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1988ஆம் ஆண்டு இந்த எஸ்பிஜி உருவாக்கப்பட்டது. இந்த எஸ்பிஜி படை டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எஸ்பிஜி படையில் உள்ள வீரர்கள் அனைவருமே அதிநவீன சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இந்தியப் பிரதமரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதே எஸ்பிஜி அமைப்பின் பிரதான பணியாகும். இந்த எஸ்பிஜி படையில் சுமார் 3000 பேர் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.


யூனியன் பிரதேசங்கள்

அதேபோல யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு அதிகபட்சமாக ரூ.41,000.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ.6,212.06 கோடியும், சண்டிகருக்கு ரூ.6,187.48 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவுக்கு ரூ.2,780 கோடியும், லடாக்கிற்கு ரூ.4,692.15 கோடியும், லட்சத்தீவுக்கு ரூ.1,586.16 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.3,432.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதர பாதுகாப்பு படைகள்:

துணை ராணுவப் படைகளில், அதிகபட்சமாக சிஆர்பிஎஃப் படைக்கு ரூ.35,147.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படைக்கு ரூ.28,231.27 கோடி, சிஐஎஸ்எஃப் படைக்கு ரூ.16,084 கோடி, ITBPக்கு ரூ. 10,370 கோடி, அசாம் ரைபிளிஸ் படைக்கு ரூ. 8,274.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+