சாலை ஓரங்களில் 125 கோடி மரங்கள் நடப்படும்... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
டெல்லி: 5 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிதின் கட்காரிக்கு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும் என்றார்.

மேலும், 20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் எனவும் கூறினார்.
முந்தைய 5 ஆண்டுகளில், ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 26 கி.மீ தூரம் வரையில் சாலைக் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டன. ஒரு ரூபாய் கூட ஊழலுக்கு இடம் தராமல் வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த பாடுபட்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சாலை ஓரங்களில் எல்லாம் சுமார் 125 கோடி மரங்களை நடப்போவதாகவும் நாள் ஒன்றுக்கு 40 கி.மீ தூரம் வரையில் சாலை கட்டமைப்பு மேற்கொள்ளப்போவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் . சாலை வசதிகளை மேம்படுத்திவதில் மிகப்பெரிய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே மும்பை- டெல்லி இடையேயான நெடுஞ்சாலையில் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications