பால் எடுக்க சென்றபோது பாய்ந்த மின்சாரம் – கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு சோகம்
டெல்லி: டெல்லியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் எடுக்க செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாலைகளிலும், ஒவ்வொரு வீடுகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அதிலும் வார இறுதி நாட்களில் மாணவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் மேற்கு டெல்லியின் கோட்லா விஹார் பகுதியில் உள்ள மைதானத்தில் 13 வயது சிறுவன் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பேட்ஸ்மேன் அடித்த பாலை எடுப்பதற்காக சிறுவன் சென்றுள்ளார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியுள்ளது. மைதானத்துக்கு அருகில் இருந்த மாடு பண்ணைக்கு செல்லும் இரும்புக் கம்பத்தின் ஒயர் மூலம் சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை தீன்தயால் உபாத்யாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் வருகிற வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல டெல்லி பிந்தபூர் அருகே கடந்த மாதம் 12 வயது சிறுவன் டியூசன் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோல மிதாபூர் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் தன் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், டெல்லி அரசு, டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு ரூ.7.5 லட்சம் மற்றும் மின்சாரம் தாக்கி 60 சதவீதத்துக்கும் மேல் காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. 40 - 60 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.25,000, ஒரு வாரத்துக்கு கீழ் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications