15 கவுன்சிலர்கள் அவுட்.. டெல்லி மாநகராட்சியில் வலுவை இழக்கிறது ஆம் ஆத்மி!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தை டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன் மூலம் மாநகராட்சியில் ஆம் அத்மி கட்சி பலம் இழந்திருக்கிறது.
கழன்று வந்த கவுன்சிலர்கள் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும், புதியதாக 'இந்திரபிரஸ்தா விகாஸ்' எனும் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த 15 பேரில் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மியின் அவைத் தலைவராக பணியாற்றிய முகேஷ் கோயலும் ஒருவர். எனவே இது ஆம் ஆத்மிக்கு கவுரவப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என்றும், முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணக்ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே ஆகியோர் இதில் இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"நாங்கள் 2022ம் ஆண்டு கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். 2.5 ஆண்டுகள் கடந்து போய்விட்டன. ஆனாலும் கூட, எங்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. மாநகராட்சி கூட்டங்களும் கூட ஒழுங்காக நடகவில்லை. எங்கள் முடிவுகளுக்கு மதிப்பளித்து மற்ற உறுப்பினர்களும் எங்களுடன் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என முகேஷ் கோயல் கூறியுள்ளார். கோயல் சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆனால் வெற்றிப்பெறவில்லை.
"கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் தலையீடு காரணமாக நலத்திட்ட பணிகளை எங்களால் செயலப்டுத்த முடியவில்லை. உயர்மட்டத் தலைமைக்கும் நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாக இருக்கிறது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து எங்களை விடுவித்துக்கொள்கிறோம்" என்றும் கவுன்சிலர்கள் புலம்பியுள்ளனர்.
கவுன்சிலர்களின் கட்சித் தாவல் இப்போது ஏதோ புதியதாக நடப்பது கிடையாது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அனிதா பசோயா, நிகில் சப்ரானா, தர்மவீர் சிங் என மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.
டெல்லி மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. மொத்தமுள்ள 260 இடங்களில் பாஜக 116, ஆம் ஆத்மி 114, காங்கிரஸ் 8 என கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த கட்சி தாவல் ஆம் ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
“ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது.. முடிவெடுக்கும் நிலையில் இல்லை”.. சிவில் நீதிமன்றத்தில் அன்புமணி மனு -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
விஜய் மட்டுமே வெற்றிக்கு அருகில் வருவார்.. கட்டமைப்பு இல்லாத கட்சி தவெக.. ப.சிதம்பரம் சொன்ன டேட்டா! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர்











Click it and Unblock the Notifications