மத்திய வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கான பங்கு அதிகரிப்பு! வட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 16-வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரைகளின்படி, மத்திய வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கான பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வட மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்தளிக்கப் பயன்படுத்தும் அளவுகோல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் தென் மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. புதிய அளவுகோளின்படி, தென்னிந்திய மாநிலங்களுக்கான மத்திய வரிப் பங்கீட்டை அதிகரித்துள்ளது. அதேசமயம், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய ஐந்து பாஜக ஆளும் இந்தி பேசும் மாநிலங்களின் ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன.

16th Finance Commission

எந்தெந்த மாநிலங்கள் பலன் பெறும்?

கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்கள், முந்தைய ஆணையத்தின் ஒதுக்கீட்டை விட அதிக பயன் பெறுகின்றன. சிறந்த வளர்ச்சி நிலைகளையும், அதிக வருவாய் பங்களிப்பையும் மேற்கோள் காட்டி, நீண்ட நாட்களாக அதிக நிதிப் பங்குக்காக வாதிட்டு வந்த தென் மாநிலங்களுக்கு, இது நிவாரணம் அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

புதிய அளவுகோள்கள்

புதிய அளவுகோளின் கீழ், மாநிலத்தின் 'மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) பங்களிப்பு' (10% வெயிட்டேஜ்) என்ற புதிய அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 'பரப்பளவு'க்கான வெயிட்டேஜ் 15% இல் இருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தென் மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. 16வது நிதி ஆணையத்தின் புதிய சூத்திரம், 6 முக்கிய அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது.

  • மக்கள் தொகை (17.5%)
  • மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு (10%)
  • மாநிலப் பரப்பளவு (10%)
  • வனப் பரப்பளவு (10%)
  • தனிநபர் GSDP தூரம் (42.5%)
  • GDP-க்கான பங்களிப்பு (10%)

தனி நபர் வருமானம்

இதன்படி, 2026-27 நிதியாண்டில் ₹15.26 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் மொத்த நிதிப் பங்கீட்டில், இந்த 5 தென் மாநிலங்களுக்கும் கூடுதலாக ₹18,330 கோடி கிடைக்கும். தனிநபர் GSDP தூரம் என்பது ஒரு மாநிலத்தின் தனிநபர் வருமானத்திற்கும், இந்தியாவின் அதிக வருமானம் கொண்ட மாநிலத்தின் தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது.

தென் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்

மாநில வாரியான கூடுதல் நிதிப் பகிர்வு விவரங்களை பொறுத்தவரை, கர்நாடகா 3.64% இலிருந்து 4.13% ஆக உயர்ந்து, ₹7,387 கோடி கூடுதல் நிதி கிடைக்கும். கேரளா 1.92% இலிருந்து 2.38% ஆக உயர்ந்து, ₹6,975 கோடி கூடுதல் நிதியை பெறும். ஆந்திரப் பிரதேசம்: 4.04% இலிருந்து 4.21% ஆக உயர்ந்து, ₹2,594 கோடி கூடுதல் நிதியை பெறும். தெலங்கானா: 2.10% இலிருந்து 2.17% ஆக உயர்ந்து, ₹1,099 கோடி கூடுதல் நிதியை பெறும். தமிழ்நாடு: 4.07% இலிருந்து 4.09% ஆக உயர்ந்து, ₹274 கோடி கூடுதல் நிதியை பெறும்.

வேறு மாநிலங்கள்

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களான தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இந்த நிதிப் பங்கீடு முக்கியத்துவம் பெறுகிறது. குஜராத், ஹரியானா, பஞ்சாப், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் இந்த புதிய சூத்திரத்தின் கீழ் பலனடைந்துள்ளன.

மத்தியப் பிரதேசம் அதிகபட்ச சரிவைச் சந்தித்துள்ளது (7.85% இலிருந்து 7.35% ஆகக் குறைவு). கோவா, சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், ஒடிசா, மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிப் பங்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+