காலையில் கிலோ கணக்கில் வெடிபொருள் பறிமுதல்! மாலை குண்டுவெடிப்பு! நாச வேலை காரணமா?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காலையில் 2,900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் சிக்கிய நிலையில், இன்று மாலை டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இதற்கு பின்னர் நாச வேலை காரணமா? தீவிரவாதிகளின் சதி திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
செங்கோட்டை அருகே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. குண்டு வெடிப்பு காரணமாக பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றன.

குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக இன்று காலை ஜம்மு காஷ்மீரில் காலையில் 2,900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications