டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு; ஆபத்தான நிலையில் 200 பேர்!
டெல்லி: டெல்லியில் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் அதிஉச்ச வேகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாகி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொத்து கொத்தாக மரணிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றன.
ஆனால் இந்த மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இல்லை. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்குப் போராடினர். இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் மொத்தம் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிருக்குப் போராடி வருகின்றனர். மிக குறைவான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜனை விநியோகிக்க வேண்டும் என்று மாநில அரசை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 25 நோயாளிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்க்கது.












Click it and Unblock the Notifications