காந்தியவாதி டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு "2023-ம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது"
2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திய ஆடிட்டோரியத்தின் அரசியல் அமைப்பு கிளப்பில் நாட்டின் சிறந்த ஆளுமைகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது பிரபலமான காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக காந்திய கொள்கைகள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் விரிவான ஆராய்ச்சிகளையும் இவர் செய்து வருகிறார். பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த "ஊழலுக்கு எதிரான உலக மக்கள் கவுன்சில் என்ற அமைப்பு" கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் காந்தி சேவா விருதினை வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், சமூகம் மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் மக்களுக்கு இந்த விருதினை ஊழலுக்கு எதிரான உலக மக்கள் கவுன்சில் அமைப்பு வழங்கி வருகிறது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திய ஆடிட்டோரியத்தின் அரசியல் அமைப்பு கிளப்பில் நாட்டின் சிறந்த ஆளுமைகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை மகராஷ்டிரா முன்னாள் முதல்வர் மகாதேவ் ஜன்கர் தொடங்கி வைத்தார். பாலிவுட் கலைஞர்களான ஷாந்திபிரியா, சந்தீப் சோபார்கர் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சினான அனைத்து ஏற்பாடுகளையும் WAC நிறுவனர் விஜய் பஜாஜ் மேற்கொண்டு இருந்தார்.

பிரபலமான காந்தியவாதியும் தொழில்நுட்பவியலாளருமான டாக்டர். பாலமுரளி பாலாஜிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான காந்தி சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக காந்திய கொள்கைகள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளையும் விரிவான ஆராய்ச்சிகளையும் இவர் செய்து வருகிறார். பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு காந்திய தத்துவம், அமைதி, மனிதநேயம் ஆகியவற்றில் கவுரவ டாக்டர் பட்டமும் நேபாளத்தில் உள்ள காந்தி அமைதி பவுண்டேஷனால் டாக்டர் பாலமுரளி பாலாஜிக்கு வழங்கப்பட்டது. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் டெக்னோ - காந்தியன் சென்டர் என்ற தன்னார்வ அமைப்பையும் நிறுவி 2008 ஆம் ஆண்டு முதலாக காந்திய கொள்கைகளை பரப்புவதோடு சமூக பணிகளையும் செய்து வருகிறார்.













Click it and Unblock the Notifications