டெல்லி: இந்தியா கேட் முன்பு 25 வயது இளைஞர் திடீர் தீக்குளிப்பால் பதற்றம்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற டெல்லி இந்தியா கேட் பகுதியில் 25 வயது இளைஞர் இன்று தீக்குளித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் கார்த்திக் மகெர் என்ற இளைஞர் இன்று இரவு திடீரென தீக்குளித்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கார்த்திக் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் மகெர் உடலில் 90% தீக்காயங்கள் பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீக்குளித்தாரா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை.
80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு- 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
இருப்பினும் போலீஸ் தரப்பில், தீக்குளித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.