டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சர்ச்சை கருத்து.. 3 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: டெல்லி சட்டசபையில் மூன்று பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லியில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பாஜக எம்எல்ஏ அம்மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இன்று டெல்லி சட்டசபை கூடிய உடனே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி பாஜக எம்எல்ஏ தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனில் பாஜ்பாய், ஜிதேந்தர் மகாஜன் மற்றும் அஜய் மஹாவார் ஆகியோரை அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர்கள் அமர் மறுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், அந்த மூன்று பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, காலையில் சபை கூடியவுடன், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக எம்எல்ஏவின் கருத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஆம் ஆத்மி எம்எல்ஏ மொஹிந்தர் கோயல் பாஜக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராகக் கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications