பார்க்கிங் ஏரியாவில் வைத்து.. 30 வயசு பொண்ணு.. 3 பேர்.. டெல்லியை பதற வைத்த அக்கிரமம்!
பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கைதாகி உள்ளனர்
டெல்லி: யாருமே இல்லாத பார்க்கிங் ஏரியாவில் 30 வயசு பெண்ணை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறைந்து வருகிறது.. அதிலும் பெண் குழந்தைகள் மீதான பலாத்காரமும் அதிகரித்தபடியே உள்ளன.. இது சம்பந்தமாக வடமாநில போலீசார்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இப்போது நாட்டின் தலைநகரிலும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் ஆஸ்பத்திரியிலேயே இந்த சம்பவம் நடந்ததுதான் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரை உறவுக்கார பெண் ஒருவர் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ராத்திரி வந்துள்ளார்.. நோயாளியை கவனித்து கொள்வதாக இவர் வந்துள்ளதாக கூறவும், விசிட்டர்கள் தங்குமிடம் ஒன்றில் அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர்.
அப்போது, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியின் செக்யூரிட்டிகள் 3 பேர், அந்த பெண்ணை, பார்க்கிங் ஏரியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அந்த இடம் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.. இது தெரிந்துதான் அவர்கள் அழைத்து வந்து, அந்த இடத்திலேயே பெண்ணை நாசம் செய்துள்ளனர்.
இதனால் கதறி துடித்த அந்த பெண், மறுநாள் அக்டோபர் 31 ம் தேதி இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில் மனீஷ் 22, பிரவீன் திவாரி 24, கன்வார் பால் 33 ஆகிய 3 பேரும் கைதாகி உள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் டெல்லிவாசிகள் ஷாக்கில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications