தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் வரலாம்.. 3ம் அலை இந்தியாவில் எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவலின் போது தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. வடமாநிலங்களில் அதிக அளவில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால் கொரோனா கேஸ்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தளர்வுகள் கொண்டு வரப்பட்ட கேரளாவில் ஏற்கனவே கேஸ்கள் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு தினசரி கேஸ்கள் தற்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மூன்றாம் அலை பரவல் குறித்து ஐசிஎம்ஆர் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எச்சரிக்கை
ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் மற்றும் மூத்த மருத்துவர் சமீரான் பண்டா இது குறித்து அளித்த பேட்டியில், இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் கேஸ்கள் உச்சத்தை தொடும். இந்தியாவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

அதிகம்
இந்தியாவில் நிலைமை மோசமாகலாம். இந்த வைரஸ் இதற்கு மேலும் உருமாற்றம் அடையாமல் இருந்தால் ஒருவேளை கேஸ்கள் குறையலாம், பாதிப்பு, தாக்கம் குறையலாம். ஆனால் வைரஸ் ஒருவேளை மேலும் உருமாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாகும். அதிக அளவில் கேஸ்கள் வரும்.

மூன்றாம் அலை
மூன்றாம் அலை அளவிற்கு இரண்டாம் அலை மோசமாக இருக்காது. ஆனால் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள குறைவான வேக்சினேஷன், லாக்டவுன் தளர்வுகள் காரணமாக அதிக கேஸ்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலை அதைத்தான் உணர்த்துகிறது.
Recommended Video

சூழ்நிலை
முடிந்த அளவு மக்கள் வெளியே செல்வதை குறைக்க வேண்டும். முடிந்த அளவு மக்கள் பயணம் மேற்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். டெல்டா வகை கொரோனா பாதிப்பு இன்னும் இந்தியாவில் குறையவில்லை. அடுத்த 100-125 நாட்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று, மூத்த மருத்துவர் சமீரான் பண்டா தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications