சீட்டு கட்டுப்போல் சரிந்த 4 மாடி கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை என்ன? அதிர்ந்த டெல்லி
டெல்லி: டெல்லி சீலம்பூர் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி சீலம்பூரில் ஜனதா மஸ்தூர் காலனி உள்ளது. இங்கு 4 மாடி கட்டடம் இருந்தது. ஒரு தரைதளம் + 3 மாடிகள் அந்த கட்டடத்தில் இருந்தன. இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுந்தது.

அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர்.
முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 6 பேர் வரை கட்டட இடிபாடுகளுக்கும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் தீயணைப்பு துறையினருக்கு உதவி செய்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் கட்டட இடிபாடுகளை அகற்றி மற்றவர்களை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் சார்பில், ‛‛ இந்த கட்டடத்தில் 8 முதல் 10 பேர் வசித்ததாக சொல்கின்றனர். இதில் 3 பெண்கள், 3 குழந்தைகளும் அடங்குவர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் வரை இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது'' என்றனர்.
இருப்பினும் இந்த கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததன் பின்னணி தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications