5 பாக். ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்.. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.
இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது அத்துமீறுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 11ம் தேதி, ஒரு மேஜர் உட்பட 2 இந்திய ராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ரஜவுரி மாவட்டத்திலுள்ள எல்லைப் பகுதியில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்திய ராணுவம் தனது பதிலடி வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 பேரை இந்திய ராணுவத்தினர் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில், இரு நாட்டு எல்லைக்கோட்டு பகுதி அருகே அமைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் 7 பதுங்கு குழிகளையும் இந்திய ராணுவம் அழித்துள்ளது.
Northern Command chief Lt Gen Ranbir Singh: In the last few days, as you mentioned in your question, 5 Pakistanis were killed, it shows that Indian Army is always ready to give them a befitting reply. pic.twitter.com/YU74PrMFoD
— ANI (@ANI) January 17, 2019
இதுபற்றி வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் ரன்பீர் சிங் கூறுகையில், இந்திய ராணுவம் எப்போதுமே, பாகிஸ்தான் ராணுவத்தைவிட ஒருபடி உயரத்தில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டுகளை பயன்படுத்தி நமது மீது தாக்குதல் நடத்துவது புதிது கிடையாது. ஆனால், இதை எதிர்கொள்ள, இந்திய ராணுவம் உரிய வகையில் தயாராக இருக்கிறது என்றார் அவர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications